இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.6 ஆக உயர்ந்துள்ளதாக பாஜக அரசின் தரவுகள் கூறுகின்றன. ஒவ்வொரு முறையும் பாஜக அரசு வெளியிடும் தரவுகளை எதார்த்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அது வெளியிடும் தரவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.
என்ன பதில் வேண்டுமோ அதற்கு ஏற்ற தரவுகளை மட்டும் தேர்வு செய்து கொள்ளும் (selective datas For selective result) போக்கின் வெளிப்பாடே இந்த நம்பகமின்மைக்கு காரணமாகும். அத்துடன் தங்க ளுக்கு விருப்பமான புள்ளி விவரங்களை தரும் வகை யில் பல முக்கியமான துறைகளில் தங்களுக்கு தலை யாட்டும் இயக்குநர்களை பணியமர்த்தியுள்ளது பாஜக அரசு.
ஆட்சிக்கு வந்தது முதலே அதற்கான பணிகளை துவங்கி விட்டது பாஜக அரசு. தேசிய குடும்பநல ஆய்வில் ரத்தச் சோகையால் குழந்தைகள், பெண் கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளி வந்தது. இது பாஜக ஆட்சியில் பெண்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் குறித்தும், ஒதுக் கீடு செய்யப்பட்ட நிதி குறித்தும் பல கேள்விகளை எழுப் பியதோடு வறுமை, வேலையின்மை உள்ளிட்ட இதர பிரச்சனைகளையும் பொது வெளியில் பேசு பொருள் ஆக்கியது.
இதனைத் தொடர்ந்து மக்கள் தொகை அறிவியல் சர்வதேச நிறுவன இயக்குநரும் பேராசிரியருமான கே.எஸ்.ஜேம்சை பாஜக அரசு சஸ்பெண்ட் செய் தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக ஒரு பிம்பம் உருவாக்கும் முயற்சியே பாஜகவின் திட்டமாக உள்ளது.
இந்தியாவின் பிரதான விவசாய உற்பத்தி வெறும் 1.2 சதவீதம் மட்டுமே. நாட்டின் பிற உற்பத்தி துறைக ளின் வளர்ச்சி விவரங்கள் குறித்து முறையான புள்ளி விவரங்கள் எதையும் அரசு வெளியிடவில்லை.
இந்தியர்களின் பிரதான உணவுப் பொருட்களான நெல்,கோதுமை, பருப்பு ஆகியவற்றின் உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது. இதனால் 2030 முதல் 2031 வரை பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி கொடுத்துள்ளது. மறுபுறம் கோதுமையை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
அதிகரிக்கும் பணவீக்கம், வேலையின்மை நெருக்கடி
கடந்த நவம்பர் மாதம் சில்லரை வர்த்தகத்திற் கான பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்ந்திருந்தது. காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், சர்க்கரை ஆகியவற்றின் சில்லரை விலை 6.6 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக உயர்ந்தது. இதனால் பண வீக்கம் கிராமப்புறத்தில் 5. 85 சதவீதமாகவும் நகர்ப் புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது. கிராமப்புறங்களின் நிலை நகர்ப்புறங்களை விட மோசமாகி விட்டது.
அக்டோபர் மாதமே காய்கறிகளின் விலை உயரத் துவங்கிய காரணத்தால் நவம்பர் மாதம் பண வீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்த நிலை யில் அதை பொருட்படுத்தாத காரணத்தால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதத்தி லும் இந்த தாக்கம் இருக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்தது.
இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் உள்ளார்கள் என ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு பெருவாரியாக உள்ள உழைக்கும் வர்க்கத்தினரை கடுமையாகப் பாதித்து வருகிறது.
பாஜக கூறிவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது பலமற்ற அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு போன்றது. ஏனெனில் வேலை யின்மை கூர்மையாக அதிகரித்து வருகிறது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை இந்தியா வில் அமல்படுத்திய 20 ஆண்டுகள் கழித்து 2010 முதல் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2010இல் 2 சதவீதமாகவும் 2015 இல் 5 சதவீதமா கவும் அதுவே 2018இல் 6 சதவீதமாகவும் வேலை யின்மை அதிகரித்துள்ளது என்று நியூ லைன் ஏடு தெரி வித்துள்ளது.
தற்போது வேலையின்மை விகிதம் 8 சதவீதம் வரை அதிகரித்திருக்கலாம் என்று சிஇஎம்ஐ தரவுகள் தெரிவிக்கின்றன.
வேலையின்மையால் தவிக்கும் பட்டதாரிகள்
இந்தியாவில் பட்டதாரி இளைஞர்கள் மட்டுமே கிட்டத்தட்ட 40 சதவீதம் வரை வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை தேடும் ஒவ்வொரு பட்டதாரியும் இரண்டு பிரச்சனையை எதிர்கொள்கிறார்.
i) வேலைக்கு தேவையானதை விட அதிகத் தகுதி
ii) வேலைக்கு தேவையான திறன் இன்மை
2021 - 2022 ஆம் ஆண்டு 1.84 கோடி இளைஞர்கள் ஒன்றிய அரசின் பணிக்காக விண்ணப்பித்தார்கள். இதில் 38,850 அதாவது வெறும் 0.2 சதவீதம் பேர் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள். ஐந்தாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தகுதி பணியிடங்களுக்கும் கூட பட்ட தாரிகளும் முனைவர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கக்கூடிய அவல நிலை தான் இந்தியா முழுவதும் நிலவுகிறது.
சீனாவை மிஞ்சிய மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனாவின் பொருளாதாரத்தை நெருங்க முடி யாத இடத்தில் தான் இருக்கிறது. அதிக மக்கள் தொகை அதிக உழைக்கும் சக்தியை குறிக்கிறது .35 வயதுக் குட்பட்ட 66 சதவீத இளைஞர்கள் உள்ள இந்தியாவில், முறையான அறிவியல் தொழில்நுட்பக் கல்வி கொடுக் கப்பட்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு முதலீடுகளை அதிகரிக்கும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த இயலும்.
ஆனால் மோடி அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் கூட புதிய கண்டுபிடிப்புக ளுக்காக செலவு செய்வதில்லை. ஒதுக்கீடு செய்யப் படும் நிதியிலும் போலி அறிவியலை முன்னெடுத்து ஊழல் செய்து வருகிறது.
குறையும் வளாக வேலைத் தேர்வுகள்
இளைஞர்களுக்கு குறைந்தபட்ச பணி நியமனங் களை வழங்கி வந்த வளாகத் தேர்வுகளும் தற்போது குறைந்து விட்டது. இந்தியாவின் மிகப் பெரும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் என கூறப்படுகிற ஐஐடிகளில் வளாக தேர்வு மூலம் இளைஞர்களை பணியமர்த்துவது 15 முதல் 30 சதவீதம் வரை இந்த ஆண்டு குறைந்துவிட்டது என தி வயர் செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வளாகத் தேர்வு மூலம் ஆட்கள் எடுக்க முன்வரவில்லை. முன்வந்த நிறு வனங்களும் கடந்த ஆண்டுகளை விட குறைவான ஆண்டு ஊதியத்திற்கு தான் தேர்வு செய்துள்ளன.
இவ்வாறு வேலையின்மையும் பணம் வீக்கமும் அதிகரித்து வறுமையின் தீவிரத்திற்கு நாடு தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிற சூழலில் தான், இந்தியப் பொரு ளாதாரம் வளர்கிறது என்று பாஜக அரசு கூறுகிறது.
கணக்கெடுப்பில் முரண்பாடுகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது என்று அரசு அறிவித்தவுடன் பொருளாதார வல்லுநர்களும் அறிவுஜீவிகளும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள். இது கடந்த ஆண்டு வளர்ச்சியான 6.2 சதவீதத்திலிருந்து எவ்வாறு திகைக்க வைக்கும் அளவுக்கு அதிகரித்தது என்றும் இந்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு செய்த முறையில் உள்ள முரண் பாடுகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினார் கள்.
பாஜக அரசாங்கம் பயன்படுத்தும் இந்த கணக்கீட்டு முறை மேம்படுத்தப்பட்டது அல்ல. இந்த கணக்கீட்டு முறையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள முக்கியமான உற்பத்தி துறைகள் மற்றும் அதன் உட்பிரிவுகளின் உற்பத்தி திறனை முறையாக கணக்கிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசாங்கம் அதை செய்துள்ளதா?
இந்த கணக்கீட்டு முறையை மாற்றி புதிய குறி யீடுகளை பயன்படுத்தினால் மட்டுமே நாட்டின் உண் மையான வளர்ச்சிப் போக்கை அறிந்து கொள்ள முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
கணக்கீட்டு முறையில் முறையான மேம்பாடு இருக்க வேண்டுமெனில் அரசாங்கம் ஆண்டுதோறும் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியிலும் நடத்த வேண்டிய கணக்கெடுப்புகளை நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால் பாஜக அரசாங்கம் மக்கள் தொகை கணக் கெடுப்பு உள்ளிட்டு பல முக்கியமான கணக்கெடுப்பு களை நடத்தவில்லை. 2015 முதலே கணக்கெடுப்புக ளை முறையாக நடத்தாமல் ஆதாரங்களை சிதைக்க துவங்கி விட்டது. இதனாலும் கணக்கெடுப்பு முறை பல குறைபாடுகளோடு இருக்கின்றது என வல்லுநர் கள் விமர்சிக்கிறார்கள்.
கணக்கெடுப்புகள் மீது விமர்சனம் வரும்போது எல்லாம், பாஜக தரப்பினர் உலக வங்கி உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் இந்த தரவுகளை உறுதிப் படுத்துகிறது என வாதிடுகிறார்கள். சர்வதேச நிறுவ னங்கள் சுயமாக எந்த ஒரு நாட்டிலும் கணக்கெடுப்பு களை நடத்துவதில்லை. அந்த நாட்டு அரசுகள் தரக் கூடிய புள்ளி விவரங்களை வைத்தே அந்நாட்டின் வளர்ச்சியை கணக்கிட்டு அறிக்கையாகவோ தரவுகளா கவோ வெளியிடுகிறார்கள்.
தற்போது பாஜக அரசின் தரவுகளை ஆராய்ந்து பார்க்கும் போது நாட்டின் வளர்ச்சி என்பது இரண்டு வித மாக உள்ளது. ஒன்று கார்ப்பரேட்டுகளின் அதீத வளர்ச்சி. இரண்டு வேலையின்மை, வறுமை ஆகியவற்றின் வளர்ச்சி.
மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாத பாஜக அரசாங்கம், கார்ப்பரேட் நண்பர்களின் வளர்ச்சி யை உறுதிப்படுத்துவதில் மட்டுமே தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது.அதானி துவங்க இருக்கும் சுரங்க நிறுவனங்களுக்காக திறந்தவெளி சுரங்கங்க ளில் எடுக்கப்படும் கனிமங்களின் அளவை 100 மில்லியன் டன்களாக உயர்த்தி உள்ளது. இது போன்ற சுரங்க விதிகளை மாற்றுவதற்கு தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சமத்துவமற்ற வளர்ச்சியை அறிந்து கொள்ள முறையான புள்ளி விவரங்களை கொண்டு கணக்கீடு நடத்தப்பட வேண்டும். அதுவே உண்மை நிலையை மக்களிடம் கொண்டு செல்லும்.